Advertisement

இனி வாழ்ந்தும் பயனில்லை - மனைவியுடன் சேர முடியாததால் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

சேலத்தில் மனைவி புரிந்து கொள்ளாத மனவேதனையில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் அம்மாணி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தான் யுவராஜ். 45 வயதான இவர் மரைன் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேவி ரம்யா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குழந்தை பிறந்த ஒரு சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவனை பிரிந்ததால் ரம்யா அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே, மனைவி பிரிந்து சென்றாலும் அவருடன் சேர்ந்த வாழ ஆசைப்பட்டு யுவராஜ் பல முறை முயற்சி செய்துள்ளார். பல முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும், யுவராஜுடன் வாழ ரம்யா சம்மதிக்கவில்லை.

இதனால் எப்போதும் சோகமாகவே இருந்துவந்துள்ளார் யுவராஜ். இந்தநிலையில் நேற்று மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாத விரக்தியில் தனது சொந்த ஊரில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் யுவராஜ். யுவராஜ் தற்கொலை குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். யுவராஜ் உடலைக் கைப்பற்றும்போது அவர் இறுதியாக எழுதிவைத்த கடிதம் சிக்கியது. அதில், ``திருமணம் முடிந்து சந்தோஷமாக இருந்த எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

அதன்பிறகு கருத்துவேறுபட்டால் அவள் என்னைப் பிரிந்து சென்றுவிட்டாள். கிட்டத்தட்ட திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் மனைவி என்னை சரியாக புரிந்துகொள்ளவில்லை. இதனால் இனி வாழ்ந்தும் பயனில்லை என்பதால் சாகிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை." என்று உருக்கமாக எழுதியுள்ளார். இவரின் தற்கொலை அந்தப் பகுதியில் சோக்ததை ஏற்படுத்தியுள்ளது.

அவரது உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் கண்ணீர் மல்க திரண்டிருந்தனர்.

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்

READ MORE ABOUT :