Advertisement

23 வயது வித்தியாசம் நடத்தையில் சந்தேகம் - கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்!

ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவன் சரண் அடைந்து உள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரிய கள்ளியூர் காமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தர்மன். 47 வயதான இவர் விவசாயமும், டிப்பர் லாரி ஓட்டியும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயசாந்தி. கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையான 23 வயது வித்தியாசம். விஜய சாந்திக்கு 24 வயது தான் ஆகிறது. சமீபத்தில் தான் இருவருக்கும் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில் இன்று விஜய சாந்தியை கொலை செய்துவிட்டதாக தர்மன் ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய வி சாரணையில், "மனைவி எப்போதும் போனில் வேறு ஒரு நபருடன் பேசிக்கொண்டே இருந்தார். பல முறை கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெளியே சென்று விட்டு நேற்று இரவு வீடு திரும்பும் போதும் வேறு ஒருவரிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அதைக் கண்டித்த போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் அருகில் இருந்த மண் வெட்டியை எடுத்து அவளைக் கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜய சாந்தியின் உடலைக் கைப்பற்றினர். மேலும் விஜய சாந்தி போனில் அடிக்கடி பேசுவாரா அப்படி பேசியிருந்தால் யாருடன் பேசியுள்ளார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சந்தேகத்தால் மனைவியை கொலை செய்தால் அவர்களது கைக்குழந்தை தற்போது அனாதை ஆகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் படிக்க
famous-writer-narumbu-nathan-s-sudden-demise-nellai
பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் திடீர் மறைவு... நெல்லையில் அதிர்ச்சி
special-law-to-protect-social-welfare-activists
சமூக நல ஆர்வலர்களை பாதுகாக்க தனிசட்டம் - ஆரல்வாய்மொழி சமூக பொது நல இயக்கம் கோரிக்கை
best-speaker-legislative-assembly-ai-rejects-appavu-s-speech
சிறந்த சபநாயகர், சட்டமன்றம் : அப்பாவு பேச்சுக்கு ஏஐ மறுப்பு
tamil-nadu-s-two-language-policy-should-be-followed-by-all-states
தமிழகத்தின் இரு மொழி கொள்கையை அனைத்து மாநிலங்கும் கடைபிடிக்கும் நிலை - நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
oh-my-you-re-the-one-who-fought-with-your-mother-k-n-nehru-creates-a-stir-on-the-banks-of-the-bharani-river
ஏம்பா நீ அன்னைக்கு சண்டை போட்டவன்தானே - பரணி கரையில் கே.என். நேருவால் கலகலப்பு
we-will-expose-evm-fraud-party-members-fighting-for-the-people-petition-the-governor
EVM மோசடியை அம்பலப்படுத்துவோம்... - மக்களுக்காகப் போராடும் கட்சியினர் ஆட்சியரிடம் மனு.
congress-veterans-who-are-swayed-by-the-wealth-of-the-rich-can-apply-for-the-post-online
இணையதளம் வழியாக பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: செல்வப்பெருந்தகை இன்னாவேடிவால் ஆடி போய் கிடக்கும் காங்கிரஸ் பழந் தலைகள்!
actor-vijay-s-y-category-who-has-what-protection-in-india
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு : இந்தியாவில் யார் யாருக்கு என்ன பாதுகாப்பு?
bjp-is-playing-the-field-with-sengottaiyan-will-aiadmk-be-united
செங்கோட்டையனை வைத்து களம் விளையாடும் பா.ஜ.க : அதிமுக ஒன்று படுமா?
former-sports-minister-ravindranath-attacked-rv-udayakumar
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரே... ஆர்.பி உதயகுமாரை தாக்கிய ரவீந்தரநாத்