கதறவிட்ட +11 வைர கற்கள்.. கொடநாடு கொலை, கோவை ஜூவல்லரி, பெங்களூர் சிறை- ஷாக் தகவல்கள்

வைர சந்தையை புரட்டிப் போட்டிருக்கும் +11 வைர கற்கள் விவகாரம்தான் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே பெருமளவு பணத்தை வைரக்கற்களாக மாற்றும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றன. கோவையில் மையமாக செயல்படும் வைர விற்பனைக்கு புகழ்பெற்ற கடைதான் இந்த பொறுப்பை கனகச்சிதமாக மேற்கொண்டது.

ஒரு சின்ன சுருக்குப் பைகளில் பல நூறு கோடி மதிப்பிலான வைரங்களை அடைத்துவிட முடியும் என ஐடியா கொடுத்து அதற்கான தொகையை பெற்றது அந்த வைர விற்பனை நிறுவனம். இதனால் போயஸ் கார்டனுக்கு வந்த தொகை எல்லாம் அப்படியே கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு வைரமாக்கப்பட்டன.

கோவையில் இருந்து கொடநாடு பங்களாவுக்கு இந்த வைர சுருக்குப் பைகள் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்பட்டன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைக்கு வந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கொடநாடு பங்களா கொலை, கொள்ளை சம்பவத்தின் போதும் இந்த வைரங்கள் குறித்து பேச்சுகள் எழுந்து அடங்கின. உயர் ரக வாட்சுகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டன.

அந்த ஒவ்வொரு வாட்சின் ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு வைரக் கல் என கணக்கிட்டாலே அதுவே பல நூறு கோடி ரூபாய் தேறும் எனவும் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. இந்நிலையில்தான் திடீரென +11 ரக வைர கற்கள் சந்தையில் பெருமளவு இறக்கப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியிருக்கிறது.

இதனால் வைர சந்தை ஒட்டுமொத்தமாக 30%க்கும் அதிகமான சரிவை சந்தித்துவிட்டது. ஜெயலலிதா வசம் இருந்த பல லட்சம் கோடி மதிப்பிலான இந்த வைர கற்கள் இப்போது சந்தைக்கு எப்படி வந்தது? யார் இவற்றை இறக்கிவிட்டது? என்கிற கேள்விகள் பூதாகரமாக வெடித்திருக்கின்றன.

இக்கேள்விகளுக்கான விடை சசிகலா அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு சிறையில்தான் இருக்கிறதாம். தினகரன் தரப்பை பொறுத்தவரை தேர்தல் செலவு உட்பட அனைத்துக்கும் விவேக்கிடம்தான் நிற்கிறார்.. அவர்கள் தரப்பில் மிடாஸ் பணத்தைத் தவிர ரொக்கமாக எதுவும் இல்லை.

இதனால் கடந்த ஒரு மாத காலமாக தினகரனின் வழக்கறிஞர்கள் பலர் சசிகலாவை தொடர்ந்து சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்தான் வைர கற்கள் சந்தையில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றன.

ஆகையால் சசிகலா அண்ட் கோதான் தேர்தல் செலவுக்காக வைர கற்களை சந்தையில் இறக்கியது எனவும் இதன் மூளையே தினகர்தான் எனவும் கூறுகின்றனர்.

- அருள் திலீபன்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds