18 தொகுதி இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18? ஏப்ரல் 23? தேர்தல் ஆணையத்தால் குழப்பமோ குழப்பம்!

Confusion over TN Assembly By-Election Dates

by Mathivanan, Mar 11, 2019, 10:19 AM IST

லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் லோக்சபா தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதியன்றே சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அதே நாளிலேயே 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் செய்திக் குறிப்பில் ஏப்ரல் 23-ந் தேதி என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெறுமா? அல்லது ஏப்ரல் 23-ல் தேர்தலா? என்கிற பெரும் குழப்பம் ஏர்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், தவறுதலாக அச்சிடப்பட்டுவிட்டது. ஏப்ரல் 18-ந் தேதிதான் இடைத் தேர்தல் நடைபெறும் என கூறியுள்ளது.

You'r reading 18 தொகுதி இடைத்தேர்தல்கள் ஏப்ரல் 18? ஏப்ரல் 23? தேர்தல் ஆணையத்தால் குழப்பமோ குழப்பம்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை