ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கொடுத்த ஷாக் - வேட்புமனு விவகாரத்தில் நாளை விசாரணை

அதிமுகவின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருபவர் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இட பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

ஆனால் விதிகளுக்கு மாறாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. எனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையொப்பமிட தடை விதிக்க வேண்டும் எனக் கூறி கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தார். முதலில் இந்த வழக்கை மார்க் 28ம் தேதி விசாரிக்கப்படும் என்றும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதற்கிடையே, தான் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று நாளை மனு அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது. இதனால் அதிமுகவினர் சற்று பதற்றத்தில் உள்ளனர். சமீபத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த கே.சி.பழனிசாமி மீண்டும் அதிமுகவில் இணைந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் முன்பிருந்த பகை முடிவுக்கு வந்துவிட்டது எனப் பேசப்பட்டது. ஆனால் மறுநாளே செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரை நாங்கள் கட்சியில் சேர்க்கவில்லை. அவர்தான் அப்படி கூறிக்கொள்கிறார் என பேசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே முட்டல் மோதல் மீண்டும் துவங்கியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds