ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி கைது..!

Serial psycho killer arrest Chennai police

Jun 12, 2019, 19:27 PM IST

சென்னையில் ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி முனிசாமியை, மானாமதுரையில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது. வடசென்னைக்குட்பட்ட வியாசர்பாடி, ரெட்டேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு மாதத்தில் 3-க்கும் மேற்பட்டோரின் ஆண் உறுப்பை சைக்கோ ஒருவன் துண்டிப்பதாக போலீஸுக்கு தகவல் கிடைத்தது.

குறிப்பாக மதுபோதையில் சாலையோரம் படுத்துக்கிடக்கும் நபர்களை குறி வைத்து இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. அஸ்லம்பாட்ஷா, நாராயணன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

விசித்திரமான வழக்கு என்பதால் சற்று கூடுதல் கவனம் எடுத்துக்கொண்ட போலீஸ் ஜல்லடை போட்டு சைகோ கொலைக்காரனை தேடிவந்தது. இந்நிலையில் பெட்ரோல்பங்கு ஒன்றில் கிடைத்த சிசிடிவி காட்சி மூலம் சைகோ முனிசாமியின் உருவத்தை தெரிந்துகொண்டது போலீஸ்.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் தனிப்படையினர் ஈட்டுபட்டிருந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில் நிலையத்தில் பிடிபட்டான் முனிசாமி. தன் பாலின உறவுக்கு அழைத்து அதற்கு மறுப்பவர்களின் ஆண் உறுப்பை அவன் துண்டிதிருப்பானோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

-தமிழ்

You'r reading ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி கைது..! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை