நாளை ஆடி 18-ம் பெருக்கு நாள் - பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும்

நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை நாளான சனிக்கிழமையிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆடிப்பெருக்கு நாளில் சுப காரியங்கள் செய்தால் மங்களம் உண்டாகும் என்பது தமிழக மக்களின் நம்பிக்கை. இந்த நாளில் விவசாயம் செழிக்க விவசாயிகள் விதை விதைப்பது வழக்கம். வீடுகளிலும் பயிர்க்குழி தோண்டி காய்கறி விதைகளை விதைப்பதும் கிராமங்களில் காலம், காலமாக நடைபெற்று வருகிறது. இதே போன்று புதிதாக சொத்து, வீடு, மனை வாங்குவோர், பாகப் பிரிவினை செய்வோர் ஆடிப்பெருக்கு நாளில் பத்திரப்பதிவு செய்வதை சுபமாக கருதுவர்.இதனால் ஆடிப்பெருக்கு நாளில், வழக்கத்தை விட பல மடங்கு ஆவணப் பதிவுகள் நடைபெறுவதும் வழக்கம்.

இந்த முறை ஆடிப்பெருக்கு நாள் விடுமுறை தினமான சனிக்கிழமையில் (நாளை) வருவதால் பத்திரப்பதிவு செய்ய திட்டமிட்டிருந்த பலரும் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கு தினத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் திறந்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடப்பட்டது. இதையடுத்து நாளை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதி வாளர்களுக்கு பத்திரப் பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக் கிழமை ஆடிப்பெருக்கு நாளாகும். அன்று மங்களகரமான நாளாக இருப்பதால், சொத்து பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணப்பதிவுகள், பதிவு அலுவலகங்களில் மேற் கொள்ளப்பட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, ஆவணப்பதிவுகள் மேற் கொள்ள ஏதுவாக அன்றைய தினத்தில் பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆகஸ்ட் 3-ம் தேதி சனிக்கிழமை விடுமுறை நாளில் ஆவணப்பதிவுகள் மேற் கொள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் செயல்பட வேண்டும்.

விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப்பதிவுகளுக்கு பதிவுச்சட்டத்தின்கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும். சனிக்கிழமை ஆவணப்பதிவு மேற் கொள்ளப்படும் என்று பொதுமக்கள் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நின்ற கோலத்தில் அத்திவரதர்; அதிகாலையில் குவிந்த கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds