உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்..

ஊரக உள்ளாட்சி தேர்தல் முறையாக நடக்கிறதா என்று கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி தலைவர் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், மாவட்ட ஊராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைகிறது.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு மட்டும் அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடலாம். இதனால், அதிமுக, திமுக கூட்டணிகள் 27 மாவட்டங்களிலும் வார்டுகளை பிரித்து கொண்டுள்ளன. ஆனாலும், அதிமுக, திமுக கட்சிகளில் உள்ளூரில் செல்வாக்கு படைத்தவர்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் அதிருப்தி வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்புள்ளது. இன்று அந்த பரபரப்புகளை காணலாம்.
இந்நிலையில், தேர்தல்களை விதிமீறல்கள் இல்லாமல் ஆளும்கட்சியினரின் அத்துமீறல்கள் இல்லாமல் நியாயமாக நடத்துவதற்காக மாவட்டம்தோறும் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை தேர்தல் பார்வையாளராக மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு டி.எஸ்.ராஜசேகர், கோவை மாவட்டத்துக்கு ஜி.கோவிந்தராஜ், கடலூர் மாவட்டத்திற்கு சி.முனியநாதன், தருமபுரி மாவட்டத்துக்கு டி.பி.ராஜேஷ், திண்டுக்கல் மாவட்டத்துக்கு எம்.எஸ்.சண்முகம், ஈரோடு மாவட்டத்துக்கு விவேகானந்தன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாகராஜன், கரூர் மாவட்டத்துக்கு வெங்கடாசலம், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஆப்ரஹாம், மதுரை மாவட்டத்துக்க என்.சுப்பையன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நாகை- தட்சிணாமூர்த்தி, நாமக்கல்- ஜெகநாதன், பெரம்பலூர்- அனில் மேஷ்ராம், புதுக்கோட்டை- அமிர்தஜோதி, ராமநாதபுரம்- அதுல் ஆனந்த், சேலம்- காமராஜ், சிவகங்கை- கருணாகரன், தஞ்சை- டாக்டர் அனீஸ் சேகர், தேனி- ஆசியா மரியம், நீலகிரி- ஜோதி நிர்மலாசாமி, தூத்துக்குடி- சம்பத், திருச்சி- லட்சுமி, திருப்பூர்- கஜலட்சுமி, திருவள்ளூர்- ஞானசேகரன், திருவாரூர்- கவிதா ராமு, திருவண்ணாமலை- சுந்தரவல்லி, விருதுநகர்- அமுதவல்லி ஆகியோரும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல்கள் குறித்து மக்கள் இவர்களிடம் புகார் செய்யலாம். இவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்க்கட்சிகளும் நம்பலாம்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :