முஸ்லிம் போராட்டம் குறித்து சட்டசபையில் முதல்வர் விளக்கம்.. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டங்கள், சில சக்திகளின் தூண்டுதலில் நடக்கிறது என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
வண்ணாரப்பேட்டையில் அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டார்கள். இதில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. பஸ்கள் மீதும், போலீசார் மீதும் கல், செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்படி அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான், கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். அதே போல், காவல் துறை வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் போது அவர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், வண்ணாரபேட்டை போராட்டத்தில் ஒரு முதியவர் இறந்தார் என்று திட்டமிட்டு ஒரு வதந்தையை பரப்பி விட்டு, தமிழகம் முழுவதும் போராட்டத்தை தூண்டி விட்டனர்.

போராட்டக்காரர்களை அழைத்து அரசுதரப்பில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே சில சக்திகள் தூண்டி விட்டு, போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :