சென்னையில் குறைகிறது கொரோனா பாதிப்பு..

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை முதல் முறையாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று 984 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினமும் 6, 7 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு வந்தது. தற்போது அதிகமான பரிசோதனைகள் எடுக்கப்பட்டும், அது 6 ஆயிரத்துக்குக் கீழ் சென்றிருக்கிறது. அதே போல், சென்னையில் தினமும் 2, 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அது கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து. ஆயிரத்தை ஒட்டி வந்தது. தற்போது முதல் முறையாக நேற்று ஆயிரத்துக்கும் குறைந்தவர்களுக்கு நோய்ப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று (ஆக.24) ஒரே நாளில் 5887 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 24 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 85,024 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6488 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 27,575 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 53,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 119 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4690 ஆக உயர்ந்தது.

சென்னையில் நேற்று 984 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 7109 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 319 பேருக்கும், காஞ்சிபுரம் 166, மதுரை 109, திருவள்ளூர் 388 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 17,227 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 16,220 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,707 ஆக அதிகரித்துள்ளது. மேலும், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, கோவை, கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :