கொரோனா ஊரடங்கு.. சுயஉதவிக்குழு பெண்களுக்கு ம.நீ.ம. நிர்வாகிகள் உதவி..

சென்னையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வழங்கினர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் ஏழை மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மாநிலம் முழுவதும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டப் பிரிவு சார்பில் கொளத்தூர் தொகுதியில் சிவசக்தி நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், கட்சி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இத்துடன், வானத்தின் வாசல் எனும் மகளிர் சுய உதவிக் குழுவிற்குச் சிற்றுண்டி கடை நடத்துவதற்குத் தேவையான தள்ளுவண்டி, கேஸ் ஸ்டவ், அனைத்து சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சுமார் 40ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களும் மற்றும் 50 ஏழைக் குடும்பங்களுக்கு 20ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பிரியதர்ஷினி உதயபானு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர்கள் பிரவீன்குமார், நந்தகோபால் ஆகியோர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கட்சியின் தொழிலாளர்கள் அணி மாநிலச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கட்சியின் கொடியேற்றி வைத்தார்.

பின்னர், சுய உதவிக்குழு பெண்களுக்குச் சிற்றுண்டி கடை நடத்துவதற்கான வாகனம் மற்றும் சமையல் பாத்திரங்களை வழங்கி உணவக தொழிலில் சிறந்து விளங்கிட வாழ்த்தினார். 50 ஏழை குடும்பத்தினரின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டது.கொளத்தூர் நகரச் செயலாளர் ஆர்.திவாகர் மற்றும் வெங்கட் கமல் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆதிதிராவிடர் நல அணி மாவட்டச் செயலாளர் ராமனாதன், ஊடகப் பிரிவு மாவட்டச் செயலாளர் பிரியங்கா, கொளத்தூர் நகரச் செயலாளர்கள் கிறிஸ்டோபர் கிஷோர் வின்சென்ட், கென்னி ஜான்சன்டிக்ரூஸ், ராஜேந்திரன், வட்டச் செயலாளர்கள் சுரேஷ், சிலம்பரசன், தொழிலாளர்கள் அணி நகரச் செயலாளர் தினகரன், வில்லிவாக்கம் நகரச் செயலாளர்கள் ஜிம்.கே.மாடசாமி, தமிழரசி மற்றும் பாலமுருகன், சுந்தர், பரமகுரு, புருஷோத்தமன், சேகர், சந்தானலட்சுமி, சுமதி ராஜசேகரன், ஜெகதீசன், அமிர்த ராஜ், பிரபாகரன், சையத் இப்ராஹிம், சீனு, பொன்ராஜ், ஜெகன்மோகன், சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :