சென்னைக்கு அடுத்து 2வது இடத்தில் கோவை.. 12 மாவட்டங்களில் பரவும் கொரோனா..

தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல், 2வது இடத்திற்கு கோவை வந்து விட்டது. இங்கு நேற்று(செப்.26) ஒரே நாளில் 656 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொடர்ந்து பரவி வருகிறது. எனினும், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மாநில அரசு நேற்று (செப்.26) இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5647 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 5 லட்சத்து 75,017 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது.


எனினும், குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5612 பேரையும் சேர்த்து, இது வரை 5 லட்சத்து 19,448 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 85 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 9233 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 46 ஆயிரத்து 336 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் தஞ்சாவூர் ஆகிய 12 மாவட்டங்களில் தினமும் புதிதாக 150 பேருக்கு குறையாமல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் புதிதாக நோய் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில் தொற்று பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் 1182 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 62,125 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 259 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 235 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 34,168 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 31,449 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.


கோவை மாவட்டத்தில் 656 பேருக்கும், சேலத்தில் 296 பேருக்கும், ஈரோட்டில் 140 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும், விழுப்புரத்தில் 161 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் 92,166 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 67 லட்சத்து 93,843 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds