சட்டவிரோதமாக மாணவர் சேர்க்கை : 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம்...!

பாண்டிச்சேரியில் மருத்துவக் கல்லூரிகளில் சட்டவிரோதமாக மாணவர்கள் சேர்க்கை மேற் கொண்ட 8 கல்லூரிகளுக்குச் சென்னை உயர்நீதி மன்றம் தலா ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது .மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகக் கடந்த 2017 ம் ஆண்டு புகார்கள் எழுந்தது. கவர்னர் கிரண்பேடி இதுகுறித்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், சிபிஐக்கும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதி இருந்தார்.

இதைத்தொடர்ந்து 2017 செப்டம்பர் மாதம், 2016-17 ம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. , விதிகளை மீறி 770 மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருந்தது அந்த ஆய்வில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவ்வாறு விதிகளை மீறி கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களை உடனே டிஸ்மிஸ் செய்யுமாறு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் வழக்குகளும் தொடரப்பட்டது. இதனிடையே, புதுச்சேரி அரசு, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை மருத்துவ கவுன்சிலுக்கு அனுப்பியது. அதை ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக 3 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டதை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, விதிகளை மீறிச் சேர்க்கப்பட்ட 105 எம்.பி.பி.எஸ். மாணவர்களை நீக்க உடடினயாக உத்தரவிட்டது.

அதன்படி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில்-41 மாணவர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில்-38 மாணவர்களும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில்-26 மாணவர்கள் என மொத்தம் 105 மாணவர்கள் தங்களின் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது .

இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் விதிகளை மீறி முறைகேடாக மாணவர்களைச் சேர்ந்த 3 தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்ததுடன், எம்சிஐ-ன் உத்தரவு சரிதான் என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :