சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நீடிக்கும் கொரோனா பாதிப்பு..

New corona cases come down to 3500 in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Oct 20, 2020, 09:11 AM IST

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நேற்று(அக்.19) நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்குப் பரவியது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இருக்கிறது. எனினும், இந்தியாவில் சமீப காலமாகப் புதிதாகத் தொற்று பாதிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருவதுடன் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தினமும் புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்கள் கொரோனா பரவல் அதிகமாகக் காணப்பட்டது. கடந்த 10 நாட்களாகப் புதிதாகத் தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.

நேற்று 3536 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது.மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 90,936 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. கொரோனா மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4515 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 42,152 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 49 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,691 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 885 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 241 பேர், திருவள்ளூர் 172, கோவையில் 290, சேலம் 192, திருப்பூர் மாவட்டத்தில் 140 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஈரோடு 90, நாமக்கல் 98, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 92 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 90,949 பேருக்கும், செங்கல்பட்டில் 41,427 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36,178 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 88 லட்சம் பேருக்கு கொரேோன பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மட்டுமே நீடிக்கும் கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை