தசரா விழாவில் பத்ரகாளி வேஷம் போட்ட நடிகர்கள்.. குலசேகரபட்டனத்தில் பரபரப்பு..

தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா உலகளவில் பிரபலம். பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள். இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா. 'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார்.குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள். தசராவுக்கு முந்தைய இரவு, பண்டையகால பெண் கடவுளான சக்தி, எல்லா இருள்களையும் அழிக்கும் இரவு. தமிழ்நாட்டில் உள்ள இந்த கடற்கரை கிராமத்தில் இந்த நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடுகின்றனர்.

அவர்கள் தங்கள் வலியை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சவால்களை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் தவத்தை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் நம்பிக்கையை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களின் தீய எண்ணங்களை அழிக்க வந்துள்ளனர். இதைச் செய்ய அவர்கள் மாற வேண்டும். அவர்கள் அந்த பெண் கடவுளாக மாறவேண்டும். அவர்கள் தங்கள் தோல்களில் வர்ணம் பூசி, அவளது பல அவதாரங்களாக மாறுகின்றனர். பின்னர் அவர்கள் உடல் நடுங்கும் ஒரு நிலைக்கு, பண்டைய சக்திக்கு அடிபணிவார்கள். பெருங்குழப்பம் மற்றும் சரணடைதல் நிறைந்த ஒரு இரவுக்கு பிறகு அவர்கள் ஒரு புத்தம் புதிய காலையை எதிர்கொள்கிறார்கள். ஒரு புதிய தொடக்கம். இது தான் குலசேகரப்பட்டினம். இதனை, 20 வயது நிரம்பிய தமிழ்மாறன் தனது 40 நாட்கள் தவத்திலிருந்து விடுபடுகிறார்.

அவர் தனது தோலில் நீல நிறத்தை பூசிக் கொள்கிறார். அவருடன் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பூசிக் கொள்கின்றனர். பண்டையகால சக்தியிடம் சரணடைய அவர்கள் தயாராகின்றனர். தமிழ்மாறனைப் போல, லட்சக்கணக்கான பக்தர்கள் தசராவின் 10 நாட்களின் போது குலசேகரப்பட்டினத்துக்கு வருகை புரிகின்றனர். தங்கள் பாவங்களையும் துயரங்களையும் பண்டையகால சக்தியான பத்ரகாளியிடம் சரணடையச் செய்கின்றனர். வெளிப்படும் அந்த பெண் கடவுளால் அவை சுத்தப்படுத்தப்படுகின்றன.

பரத்பாலாவால் உருவாக்கப்பட்ட இந்த 'அறிதுயில்' திரைப்படம் அபாரமான நவீன விளிம்பில் ஒரு பண்டைய திருவிழா பாரம் பரியத்தை படமாக்குகிறது. இது குறித்து பரத்பாலா கூறும்போது, “என்னை கவர்ந்தது என்னவென்றால், மக்களின் நம்பிக்கை மற்றும் அந்த ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மூலம் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எவ்வாறு தீர்வுகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதும் ஆகும். இயக்குநர்களுக்கு இது ஒரு சொர்க்கம் - இங்கு ஒவ்வொரு திருப்பமும் ஒரு புதிய உலகத்தைக் கொண்டுவருகிறது" என்று கூறியுள்ளார். தசரா விழாவில் நடிகர்கள் பத்ரகாளி வேடம் போட்டது திருவிழாவில் பங்கேற்றவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :