பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக அரசுஅறிவித்துள்ளது.சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Balaji, Nov 12, 2020, 10:46 AM IST

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் இம்மாதம் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அரசின் இந்த முடிவுக்கு சில தரப்பிலிருந்து குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு எழுந்தது. மேலும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் பள்ளி திறப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

*இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர்களை வரவழைத்து பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது . மேலும் இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றமும் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசுக்கு ஏன் இத்தனை அவசரம் காட்ட வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இதையடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவதை ஒத்தி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த எடுக்கப் பட்டதாகும். பள்ளிகள் திறப்பு தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.முதுநிலை இறுதி ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்களுக்கு விடுதிகள் திறக்கப்படும்.இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.மற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே நடந்து வரும் இணையவழி கல்விமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு தமிழக அரசு அறிவிப்பு...! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை