நாளை முதல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

புயல் உருவாவதன் காரணமாக டிசம்பர் 1-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது வருகிறது. இது புயலாக மாறி, வரும் 2-ம் தேதி இலங்கையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் அந்தப் புயல் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாகத் தென் தமிழகத்தில் குறிப்பாகக் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புயல் காரணமாகத் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்த நான்கு நாட்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

READ MORE ABOUT :