செய்தியாளர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது: பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழகத்தில் யார் முதல்வர் என்ற விவகாரத்தில் சில செய்தியாளர்கள் நினைப்பது நடக்காது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவித்துள்ளார்கள். ஆனால் எங்கள் தேசிய தலைமையும், பாராளுமன்ற குழுவும் அதைப் பரிசீலனை செய்து உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள் என்றார். நாங்கள் எந்த இடத்திலும் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமியை ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று சொல்லவில்லை. இந்த விஷயத்தில் சில செய்தியாளர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி தான் உள்ளார் என்றார்.
You'r reading செய்தியாளர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது: பாஜக தலைவர் எல்.முருகன் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :