தமிழகத்தில் மினி கிளினிக்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

மினி கிளினிக் மருத்துவப் பணியாளர்கள் செவிலியர்கள் பணி நியமனம் தொடர்பாக இப்போது உள்ள நிலையே தொடரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த வைரம் சந்தோஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நியமனம் குறித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் தொடங்குவதற்கான அரசாணை கடந்த டிசம்பர் 5 ல் வெளியிடப்பட்டது. இதில் செவிலியருக்கு ரூ.14, ஆயிரம் , மருத்துவ உதவியாளர்கள் ரூ.6ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக்களுக்காக 585 மருத்துவ உதவியாளர்களும், 1415 செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதற்காக சுகாதாரத்துறை இயக்குனர் டிசம்பர் 15ம் தேதி பணியாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் இதன்படி தனியார் ஏஜென்சி ஒன்றின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்படி ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவதால் இன சுழற்சி முறை, வேலைவாய்ப்பு பதிவு ஆகியவை முறையாக பின்பற்றப்பட மாட்டாது. . கொரோனா தொற்று நேரங்களில் அனுபவமில்லாத செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் ஏஜென்சி மூலம் தேர்வு செய்யப்படுவது சரியான ஒன்றாக5t5 இருக்க முடியாது. எனவே மருத்துவ பணியாளர்கள் செவிலியர்களை ஏஜென்சி முறையில் தேர்வு செய்ய வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டுமென தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பாக வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால், கால அவகாசம் அளிப்பதாக கூறிய நீதிபதிகள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் பணி நியமனம் குறித்து தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தற்போதைய நிலையே தொடர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் மினி கிளினிக்கிற்கு இனிமேல் பணியாளர்கள் நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :