மழையால் களை இழந்த பொங்கல் பண்டிகை

பொங்கல் திருநாள் இன்று தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை தூத்துக்குடி தென்காசி கடலூர் ஆகிய மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை களை இழந்து காணப்பட்டது . இம்மாவட்டங்களில் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்த மழையால் பொங்கல் கொண்டாட்டம் கலை இழந்து காணப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் வசுமித்ர மணிமுத்தாறு சேரன் மகாதேவி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம் செய்துங்கநல்லூர் சிறு வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் கடையநல்லூர் செங்கோட்டைக் கடையம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது கருங்குளம் செய்துங்கநல்லூர் சிறு வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் தென்காசி மாவட்டத்தில் தென்காசி குற்றாலம் கடையநல்லூர் செங்கோட்டைக் கடையம் ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி, திட்டக்குடி, வேப்பூர், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது கனமழையால் நெல்லை கடலூர் மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பொங்கலைக் கொண்டாட முடியாமல் போனது. தைமாதத்தில் மழை பெய்வது என்பது தங்களது வாழ்நாளில் பார்த்தது கிடையாது என்றும் இது அறுவடைக் காலம் என்பதால் மழை இருக்காது அறுவடை செய்த நெல்லை இயற்கைக்குப் படைத்துக் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகையில் அறுவடை செய்ய முடியாமல் தங்களது நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகளைக் கவலையடையச் செய்துள்ளது .

மேலும் நெற்பயிர் மட்டுமில்லாமல் உளுந்து, கரும்பு, மக்காச்சோளம், பருத்தி என அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளதால் செய்வதறியாமல் திகைத்துப் போயுள்ளனர்.பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கக் கூட இந்த மழையால் மக்கள் வரவில்லை என்றும் மழையில் நனைந்த மஞ்சள் கொத்துகளைக் கூட விற்க முடியாமல் தங்கள் திணறி வருவதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :