தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சையில் 6 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு 589 ஆக சரிவு..

தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 600க்கு கீழ் குறைந்தது. தற்போது 5940பேர் சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் வேகமாகப் பரவிய கொரோனா தொற்று நோய்ப் பாதிப்பு, அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குறையத் தொடங்கியது.

தற்போது பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 20க்கும் கீழ் குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 50 ஆயிரம் முதல் 55 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.16) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 52 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 589 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 30,772 ஆக உயர்ந்தது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 770 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 12,568 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 7 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,264 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5940 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். இவர்களில் சென்னையில் 1959 பேரும், செங்கல்பட்டில் 337 பேரும், கோவையில் 608 பேரும் மற்றும் சேலம், திருப்பூர், திருவள்ளூர் மாவட்டங்களில் சராசரியாக 200 பேரும் சிகிச்சையில் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் அதை விடக் குறைவான கொரோனா நோயாளிகளே மருத்துவமனைகளில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 164 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 28 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 66 பேருக்கும் சேலம் மாவட்டத்தில் 25 பேருக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 20 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :