நிர்மலாவை எனக்கு தெரியாது சிபிஐ விசாரணை அவசியமில்லை - ஆளுநர் பேட்டி

நிர்மலா என்பது யார் என்றே தனக்கு தெரியாது என்றும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

by Lenin, Apr 17, 2018, 20:35 PM IST

நிர்மலா என்பது யார் என்றே தனக்கு தெரியாது என்றும் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாக தெரிகிறது. ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுகிறது.

நிர்மலா தேவி கருவியாக செயல்பட்டிருக்கிறார். அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனையடுத்து, பேராசிரியை நிர்மலா தேவியை காவல் துறையினர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து போலீசார், அவரை கைது செய்தனர். நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "நிர்மலா என்பது யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ஆனால் மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு சென்ற ஆசிரியை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், இது குறித்து விசாரணை செய்வதற்கு சி.பி.ஐ விசாரணை அவசியம் இல்லை என்று தெரிவித்தார். உடனே செய்தியாளர்கள் ஏன் சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என கூறுகின்றீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு, தற்போது விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த விசாரணை குழுவில் உள்ள விசாரணை ஆணையர் சந்தானம், இந்த சர்ச்சை குறித்து தீவிர விசாரணை செய்து உண்மையை நிலையை வெளிப்படுத்துவார் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading நிர்மலாவை எனக்கு தெரியாது சிபிஐ விசாரணை அவசியமில்லை - ஆளுநர் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை