யானைகள் இறப்பு குறித்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அவர் தமது மனுவில் சமீப ஆய்வுகளின் படி யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தந்தம், முடி போன்றவற்றுக்காக யானைகளைக் கொடூரமான முறையில் கொல்லும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இது போன்ற நிகழ்வுகளால் விரைவில் யானை இனமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே யானைகள் வேட்டையாடப்படுவது குறித்து தேசிய வனவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ இணைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர்.இதே போலத் தமிழகத்திலுள்ள காடுகளில் உள்ள விலங்குகளைக் கொன்று உடலைக் கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய சௌமியா என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது வனவிலங்கு குற்றத்தடுப்பு சிறப்புப் பிரிவின் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "யானைகள் தந்தங்களுக்காகக் கொல்லப்படுவது மற்றும் தந்தங்களின் விற்பனை என்பது சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இது மிகப்பெரும் மாபியாவாகவே உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "யானை மிகவும் முக்கியமான உயிரினம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்காற்றுபவை. . இந்த விவகாரத்தில் பலருக்குத் தொடர்பு உள்ள நிலையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மீது மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வெவ்வேறு மாநிலங்களிலும் உள்ளனர். ஆகவே தமிழகத்தைத் தாண்டி இது குறித்த விசாரணை அவசியமாகிறது. ஆகவே தமிழகத்தில் யானைகள் இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :