புதுச்சேரி: தேர்தல் வருவதால் ட்ரான்ஸ்பர் வந்தது

by Balaji, Feb 11, 2021, 18:13 PM IST

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் புதுச்சேரி வர உள்ளதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் காவல்நிலையத்தில் பல அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட போது அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்தும் இடமாற்றம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக, ஆய்வு நடத்தத் தலைமைத் தேர்தல் ஆணையர் புதுச்சேரி வர உள்ள நிலையில் புதுச்சேரி மாநில காவல் நிலையங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 20 இன்ஸ்பெக்டர், 51 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

You'r reading புதுச்சேரி: தேர்தல் வருவதால் ட்ரான்ஸ்பர் வந்தது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை