மழை தீவிரத்தை கண்டறிய நவீன கருவி... ஆர்.பி.உதயகுமார்

பருவமழை தீவிரத்தை 5 நாட்களுக்கு முன்பாக கண்டறிவதக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Rain

சென்னை எழிலகத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வெள்ளத்தின் அபாயத்தை முன் கூட்டியே அறியும் வகையிலான சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதற்காக அமைச்சர் முன்னிலையில், வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால், இந்திய கடலோர தேசிய ஆராய்ச்சி மைய இயக்குனருடன் எம்வி ரமணமூர்த்தியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் பேசிய அமைச்சர், ஐந்து நாட்களுக்கு முன்பாகவே வெள்ளத்தின் அபாயம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது." எனக் கூறினார்.

"தேசிய கடல் ஆராய்ச்சி மையம், மும்பை இந்திய தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர்வு நிறுவனம் ஆகியவை கூட்டாக வடிவமைக்கப்பட்ட அமைப்பாக இது இருக்கும்." என்றார்.

RB Udayakuma

"வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம். 32 வருவாய் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நேரடி ஆய்வு, காணொலி காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது."

"மேலும், வருவாய் நிர்வாக துறையில் வரும் மனுக்களின் நிலையை அறியவும், நடவடிக்கையை கண்காணிக்கவும் வளைதளபயன்பாடு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்" என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :