சிகிச்சையளித்தாரா செக்யூரிட்டி? விழுப்புரம் அரசு மருத்துவமனையில் விசாரணை

விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு காயத்துடன் வந்தவருக்கு தனியார் பாதுகாவல் நிறுவன ஊழியர் சிகிச்சை அளித்தார் என்ற தகவல் குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் மருத்துவசேவை பணிகள் இணை இயக்குநர் விளக்கம் கேட்டுள்ளார்.


கடந்த திங்கள்கிழமை முதல், விழுப்புரம் பகுதியை சுற்றியுள்ளவர்களின் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடக கணக்குகளில் வீடியோ ஒன்று வலம் வருகிறது. தனியார் பாதுகாவலருக்கான சீருடையில் இருக்கும் ஒருவர், காலில் காயம் பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் காட்சி அந்த ஒளிப்பதிவில் உள்ளது. 'விழுப்புரம் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சிகிச்சையளிக்கும் காட்சி' என்று அப்பதிவுக்கு விளக்கக் குறிப்பும் அளிக்கப்பட்டிருந்தது.


இது பற்றி நடந்ததாக கூறப்படுவதாவது:


விழுப்புரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 35). திங்கள்கிழமை அதிகாலை ஆட்டோ ரிக் ஷாவின் புகைபோக்கியில் இவரது கால் பட்டுவிட்டது. காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு பாதுகாவல் பணியில் தனியார் பாதுகாவல் நிறுவனம் ஒன்றின் ஊழியர் கார்த்திக் என்பவர் பணியிலிருந்துள்ளார்.


அவசர சிகிச்சை பிரிவினுள் நோயாளிகளுடன் வந்தவர்கள் கூட்டமாக சென்றதால், அவர்களை வெளியேற்றுவதற்காக தான் உள்ளே சென்றதாகவும், காலில் காயம் ஏற்பட்டதால் வெளியேறிக்கொண்டிருந்த இரத்தத்தை பெண் ஒருவர் தமது சேலையால் துடைத்ததாகவும், அப்படி செய்வது காயத்தை பாதிக்கும் என்று கூறி, தாம் இரத்தத்தை துடைப்பதற்காக பஞ்சினை அளித்ததாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். அதிக இரத்தத்தைப் பார்த்ததால் தனக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாக தெரிவித்த அப்பெண், இரத்தத்தை துடைப்பதற்கு உதவும்படி கேட்டுக்கொண்டதாலேயே தாம் ஜீவாவின் காலிலிருந்து வெளியேறிய இரத்தத்தை துடைத்ததாகவும், அதை வீடியோ எடுத்த யாரோ ஒருவர் தவறான தகவலோடு அதை பரப்பி வருவதாகவும் கார்த்திக் கூறியுள்ளார்.


அரசு மருத்துவமனைக்கு பாதுகாவல் வழங்கி வரும் தனியார் நிறுவனம் குறிப்பிட்ட அந்த ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. புதன்கிழமையன்று சுகாதார சேவை பணிகள் இணை இயக்குநர் சுந்தர்ராஜன், விழுப்புரம் அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி சாந்தியிடம் இச்சம்பவம் குறித்து அறிக்கை கேட்டுள்ளார்.


"திங்கள் அன்று காலை, அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மருத்துவ பணியாளர்கள், தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர் உள்பட ஐந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். அப்பிரிவில் கூடிய மக்களை வெளியேற்றும்படி உள்ளே வந்த தனியார் பாதுகாவலர், நோயாளியின் காயத்திலிருந்து வெளியேறிய இரத்தத்தை துடைத்துள்ளார். இது குறித்து அப்போது பணியிலிருந்த மருத்துவர் மற்றும் செவிலியரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்," என்று விழுப்புரம் மருத்துவ அதிகாரி சாந்தி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds