சென்னையில் அதிகமாக மது குடிப்பவர்களுக்கு பரிசு!
Price given for who drink more than 1000rs in chennnai
தீபாவளிக்கு எல்லா இடங்களிலும் பரிசு தருவார்கள் இது வழக்கம் இதற்காக பல கடைகள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் செய்வார்கள் ஆனால் சென்னைல் ஒரு புதுவிதமான விளம்பரத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்சி அடைந்தார்கள்.
அந்த விளம்பரம் செய்த மேலாளர் மற்றும் உதவியாளரை கைது செய்துள்ளார்கள்.
அப்படி என்னதான் விளம்பரம் செய்தார்கள் தெரியுமா?
சென்னை திருவல்லிக்கேணி வல்லபா அஹ்ரஹார தெருவில் உள்ள தனியார் மதுபானக் கடையில் அனுமதி பெறாமல் கடை விளம்பரத்திற்காக பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கிய பார் மேலாளர் மற்றும் உதவியாளரை கைது செய்தார்கள்.
அந்த விளம்பரத்தில் 1000 ரூபாய்க்கு மேல் மது அருந்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் குளிர்சாதன பெட்டி, டிவி மற்றும் துணி துவைக்கும் இயந்திரம் வழங்கப்படும் எனக் கூறி 3 விளம்பரப் பலகைகள் வைத்து மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் மேலும் இது மது அருந்துவதை ஊக்குவிப்பதாக கூறி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்கள். இந்த தகவலை தொடர்ந்து கடையின் மேலாளர் மற்றும் உதவியாளரை கைது செய்ததொடு கடையில் இருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
You'r reading சென்னையில் அதிகமாக மது குடிப்பவர்களுக்கு பரிசு! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News