இளம் பெண் வீட்டில் இருந்து விஷால் சுவர் ஏறி குதித்த விவகாரம்...புகார் கூறிய பெண் மீது வழக்கு பதிவு

Police register case in Vishal me too issue

by Mathivanan, Nov 29, 2018, 14:35 PM IST

சென்னை கோபாலபுரத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட விஸ்வதர்ஷினி என்ற பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது டான்ஸர் காயத்ரி புகார் கூறியிருந்தார். இந்த டான்ஸர் காயத்ரியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் விஸ்வதர்ஷினி.

காயத்ரிக்கும் விஸ்வதர்ஷினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து டான்ஸர் காயத்ரி குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் விஸ்வதர்ஷினி பதிவிட்டு வருகிறார்.

அதில், காயத்ரி தம்மை லெஸ்பியன் உறவுக்கு அழைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார் விஸ்வதர்ஷினி. மேலும் கடந்த 11-ந் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில், நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு காயத்ரி வசித்த கோபாலபுரம் அபார்ட்மெண்ட்டின் மதில் சுவர் ஏறி குதித்து வெளியேறியதாகவும் இது தொடர்பான சிசிடிவி பதிவை அந்த அபார்ட்மெண்ட்டின் உரிமையாளர் ராவ் என்பவர் தம்மிடம் கொடுத்ததாகவும் விஸ்வதர்ஷினி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காயத்ரி கொடுத்த புகாரின் பேரில் தற்போது விஸ்வதர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading இளம் பெண் வீட்டில் இருந்து விஷால் சுவர் ஏறி குதித்த விவகாரம்...புகார் கூறிய பெண் மீது வழக்கு பதிவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை