தனித் தமிழ்நாடே என் இலக்கு- மூச்சு அடங்கும் வரை குரல் கொடுப்பேன்: வைகோ திடீர் பேச்சால் பரபரப்பு
vaiko demands Liberation of TamilNadu from India
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்து தனிநாடாகும்; தனித் தமிழ்நாடுதான் என் இலக்கு; தனித் தமிழ்நாட்டுக்காக மூச்சு அடங்கும் வரை குரல் கொடுப்பேன் என மதிமுக பொதுச்செயலர் வைகோ திடீரென பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் ஆளுநர் பன்வாரிலாலை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தியும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் திமுக மற்றும் பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன.
இதில் வைகோ பேசியதாவது:
தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதியாக இருக்கிற தோழர்கள் கலந்து கொண்டிருக்கும் கூட்டம் இது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் தமிழ்நாடு தனிநாடாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியா துண்டு துண்டாக சிதறப் போகிறது. சோவியத் ரஷ்யாவில் நடந்தது இந்தியாவில் நடக்கப் போகிறது. என் வாழ்நாளில் என் மூச்சு அடங்குவதற்குள் தனித் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
இவ்வாறு வைகோ பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
You'r reading தனித் தமிழ்நாடே என் இலக்கு- மூச்சு அடங்கும் வரை குரல் கொடுப்பேன்: வைகோ திடீர் பேச்சால் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News