லோக்சபா தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். தமிழ்நாட்டின் மரபணுவை மாற்ற நினைக்கும் எந்த கட்சியுடனும் ஒருபோதும் கூட்டணி வைக்கப் போவதில்லை.
லோக்சபா தேர்தல் பணிகளுக்கான குழு மகேந்திரன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மகேந்திரன் குழு வேட்பாளர்களை நியமிக்கும்.
நான் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன், அது எந்த தொகுதி என்பது ஆலோசித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.