பாக். தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுவிப்பு.. காஷ்மீர் எல்லையில் பதற்றம்

பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய அரசுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தும் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம், பாகிஸ்தான் கடும் கோபம் கொண்டு, காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க முயன்றது. ஆனால் அது தோல்வியுற்றது. அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாவிட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மிரட்டல் விடுத்தார். இந்தியாவுடன் போர் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். அதே போல், அந்நாட்டு ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வாவும், பாகிஸ்தான் எந்த எல்லைக்கும் போகும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், காஷ்மீரில் திடீர் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு உளவுத் துறை(இன்டலிஜென்ஸ் பீரோ) தகவல் அனுப்பியுள்ளது. அதில், பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெய்ஷ் இ முகமத் இயக்கத் தலைவர் மசூத் அசாரை ரகசியமாக விடுதலை செய்திருக்கிறார்கள். மேலும், எல்லையில் சியால்கோட் - ஜம்மு, ராஜஸ்தான் செக்டர்களுக்கு அருகே பாகிஸ்தான் ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. எனவே, பெரிய தாக்குதல்களில் ஈடுபட பாகிஸ்தான் முயற்சிக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

இதையடுத்து, காஷ்மீர் எல்லைகளில் இந்தியாவும் படைகளை அனுப்பி வருகிறது. எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், எல்லைகளில் பதற்ற சூழல் காணப்படுகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds