கஜகஸ்தானில் கட்டிடம் மேல் விமானம் மோதி விபத்து.. 14 பேர் உயிரிழப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 27, 2019, 11:46 AM IST

கஜகஸ்தானில் ஜெட்விமானம் ஒன்று, கட்டிடத்தின் மீது விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.

கஜகஸ்தான் நாட்டில் அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து 95 பயணிகள் மற்றும் 5 விமான நிறுவன ஊழியர்களுடன் இன்று காலையில் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டு, தலைநகர் நூர் சுல்தானை நோக்கிச் சென்றது. அச்சமயம், பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதையடுத்து, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் இருந்த 2 அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் பலத்த சேதமடைந்தது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 14 பேர் உயிழந்தனர். மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

You'r reading கஜகஸ்தானில் கட்டிடம் மேல் விமானம் மோதி விபத்து.. 14 பேர் உயிரிழப்பு.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை