கறுப்பினத்தவர் கைது விவகாரம் - நேரில் வருத்தம் தெரிவிக்கிறார் ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி

கடந்த வாரம் அமெரிக்கா பிலடெல்பியாவில் ஸ்டார்பக்ஸ் உணவகத்தில் கறுப்பினத்தவர் இருவர் கைது செய்யப்பட்டனர். அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக பிலடெல்பியா காவல் ஆணையர் ரிச்சர்ட் ராஸ், முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்துப் போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்டார்பக்ஸ் நிறுவனம், நடைபெற்ற சம்பவத்திற்கு தனது இணையதளத்தில் மன்னிப்பு கோரியுள்ளதோடு, தங்கள் நிறுவனம் இனவெறிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.

எந்த ஆர்டரும் கொடுக்காமல் நீண்ட நேரம் உணவகத்தில் இருந்ததால், உணவக மேலாளரான பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், தங்கள் நண்பருக்காக காத்திருந்த வேளையில் காவல்துறையினர் தங்களை கைது செய்ததாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தி பரவ ஆரம்பித்த நேரத்திலிருந்து தொடர்ந்து தன் வருத்தங்களை பதிவு செய்து வந்ததோடு, கடந்த திங்கள்கிழமை, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "நடந்த சம்பவம் தவறானது; கண்டிக்கத்தக்கது. இனி இதுபோன்றவை நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,"  என்று தெரிவித்ததோடு, அவர்களை நேரடியாக சந்தித்து வருத்தம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் ஸ்டார்பக்ஸ் தலைமை செயல் அதிகாரி கெவின் ஜாண்சன் கூறினார். 

"2018-ல் இனப்பாகுபாடு எப்படி இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். ஸ்டார்பக்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது மட்டும் போதாது," என்று கருத்து தெரிவித்துள்ள பிலடெல்பியா மேயர் ஜிம் கென்னி, "ஸ்டார்பக்ஸின் நடைமுறை, விதிமுறைகள் பற்றியும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்ள பணியாளர்களுக்கு பயிற்சி அவசியமா?" என்று ஆய்வு செய்யும்படி, பிலடெல்பியா மனித உரிமைகள் ஆணையத்தை கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

ஸ்டார்பக்ஸில் கழிப்பறையை உபயோகிக்க கட்டுப்பாடுகள் இல்லையெனினும், போக்குவரத்து அதிகமான பகுதிகளில் உள்ள கிளைகளில், கழிப்பறையை பயன்படுத்த ரசீதில் உள்ள குறியீட்டு எண் தேவை என்ற நிலை உள்ளது. இந்த சம்பவத்திலும் வாடிக்கையாளர்கள் கழிப்பறைக்கான குறியீட்டு எண்ணை கேட்டதினால் பிரச்னை எழுந்ததாக தெரிகிறது. 

கடந்த திங்களன்று குறிப்பிட்ட ஸ்டார்பக்ஸ் கிளை முன்பு போராட்டம் செய்தவர்கள் மழையின் மத்தியில்  ஒதுங்குவதற்கு நிர்வாகம் அனுமதித்தது எனவும், நடந்த சம்பவம் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலாளர் தற்போது அந்தக் கிளையில் பணியாற்றவில்லையென்றும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜேமி ரைலி தெரிவித்துள்ளார்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!
Tag Clouds