Jul 23, 2019, 21:57 PM IST
நெல்லை மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமைக்குரிய முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியையும், அவருடைய கணவர் மற்றும் வீட்டு வேலைக்காரப் பெண் ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 23, 2019, 21:48 PM IST
கடந்த 17 நாட்களாக கர்நாடகாவில் நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். Read More
Jul 23, 2019, 18:20 PM IST
இங்கிலாந்து நாட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த போட்டியில் ஆளும்கட்சித் தலைவராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் பிரதமராக அவர் பொறுப்பேற்கிறார். தற்போதைய பிரதமர் தெரசா மே, நாளை(ஜூலை24) பதவி விலகுகிறார். Read More
Jul 23, 2019, 14:54 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை.ஆளும் கட்சி தரப்பில் இருக்கைகள் காலியாக கிடப்பதைப் பார்த்த சபாநாயகர் கோபமடைந்து எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jul 23, 2019, 13:37 PM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை(ஆர்டிஐ) மத்திய பாஜக அரசு தொல்லையாக பார்க்கிறது. அதனால்தான், மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 23, 2019, 12:29 PM IST
ராஜ்யசபாவில் 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நுழையவுள்ள வைகோ, தன்னை வசைபாடிய சுப்பிரமணிய சுவாமியை நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டனர். Read More
Jul 23, 2019, 11:01 AM IST
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. Read More
Jul 23, 2019, 10:07 AM IST
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதை காலம் தாழ்த்தி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்து விடலாம் என்ற நப்பாசையில், நேற்றும் பல்வேறு நாடகங்களை நடத்தி, சட்டப்பேரவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம் கடைசியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2019, 14:05 PM IST
காலியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப்போவதாக புனேயைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிவித்துள்ளார். தம்மிடம் தலைவர் பதவியைக் கொடுத்தால் கட்சியை தலை நிமிரச் செய்வேன் என்றும் 28 வயதான அந்த இளைஞர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 22, 2019, 13:48 PM IST
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம், அது தொடர்பான விசாரணைக் கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத் தயங்குவது ஏன் என்று ஸ்டாலின் ேகள்வி எழுப்பியுள்ளார். Read More