Apr 30, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 33,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 23,651 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 29, 2020, 14:14 PM IST
சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை(ஏப்.30) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 26, 2020, 11:11 AM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி, வாகனங்களில் சுற்றியவர்களிடம் ரூ.3 கோடியே 27 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி மக்கள் வாகனங்களில் செல்வதும், கூட்டம் கூடுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. Read More
Apr 25, 2020, 14:11 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. Read More
Apr 24, 2020, 15:24 PM IST
சென்னை, கோவை, மதுரை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. Read More
Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 16, 2020, 14:57 PM IST
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கத் தடையில்லை. அதே சமயம், சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 14, 2020, 08:22 AM IST
தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. Read More
Apr 11, 2020, 14:05 PM IST
சென்னையில் தினமும் 11 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகின்றனர் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.இந்தியாவில் தற்போது கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7447 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6565 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. Read More