Aug 14, 2019, 09:37 AM IST
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில், மீண்டும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கேரளவாசிகள் மீண்டும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். Read More
Aug 13, 2019, 13:00 PM IST
மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வரும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். Read More
Aug 13, 2019, 09:16 AM IST
மேட்டூர் அணை வரலாற்றில் 65-வது முறையாக இன்று காலை 100 அடியை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 20 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இன்று இரவுக்குள் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 12, 2019, 13:30 PM IST
கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 8, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. Read More
Aug 7, 2019, 14:14 PM IST
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை அவருடைய சிலை திறப்பு விழா மற்றும் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். Read More
Aug 7, 2019, 14:01 PM IST
சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு, இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. Read More
Aug 6, 2019, 10:15 AM IST
திமுக தலைவர் மு.கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை சென்னையில் அவருடைய சிலை திறப்பு விழா , பேரணி, பொதுக் கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார். Read More