Aug 8, 2019, 14:49 PM IST
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதைக் காரணம் காட்டி இந்திய தூதரை பாகிஸ்தான் திருப்பி அனுப்புவது ஒரு தலைப்பட்சமான மற்றும் அவசரமான முடிவு என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. Read More
Aug 8, 2019, 14:18 PM IST
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதாலும், அரசு நிர்வாகம் சரிவர திட்டமிடாததாலும் தினமும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்தனர். Read More
Aug 8, 2019, 14:13 PM IST
காஷ்மீரில் முதல்முறையாக 22 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் திரும்பிய அவரை போலீசார், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். Read More
Aug 8, 2019, 14:05 PM IST
தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிலவரம் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. Read More
Aug 8, 2019, 13:04 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More
Aug 8, 2019, 12:49 PM IST
நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கென்று விவோ நிறுவனம், விவோ எஸ்1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பின்பக்கம் மூன்று காமிராக்கள், வாட்டர்டிராப் நாட்ச், தொடுதிரையில் விரல்ரேகை உணரி போன்ற அம்சங்கள் அடங்கிய விவோ எஸ்1 ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கருதப்படுகிறது. Read More
Aug 8, 2019, 12:17 PM IST
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றுகிறார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை ரத்து செய்யப்பட்டது குறித்து அவர் பேசவிருக்கிறார். Read More
Aug 8, 2019, 12:07 PM IST
ஒரு முதலமைச்சரின் மனைவியிடமே வங்கி மேலாளர் போல் போனில் பேசி, ரூ.23 லட்சத்தை ஆன்லைனில் சுருட்டிய ஜார்கண்ட் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா எம்.பி.யுமான பிரநீத் கவுரிடம் கடந்்த மாதம் 29ம் தேதி ஒருவர் போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்தார். போனில் தொடர்பு ெகாண்ட மர்ம நபர், தன்னை ஸ்டேட் பேங்க் மேலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். Read More
Aug 8, 2019, 11:00 AM IST
காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள பி.டி.பி. கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, தனது கட்சியைச் சேர்ந்த 2 ராஜ்யசபா உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 8, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. Read More