விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது.


காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் மீது பிப்.,27-ல் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறின. அப்படி இந்திய எல்லைக்குள் அத்துமீற முயன்ற பாகிஸ்தானின் எப்-16 விமானம் ஒன்றை துரத்தி சென்று சுட்டு வீழ்த்தினார் விங் கமாண்டர் அபிநந்தன்.


தான் சென்ற மிக் 21 ரக விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன், பாகிஸ்தானின் எப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தினார் அபிநந்தன். அதி நவீன ரகமான எப்-16 விமானத்தை, மிக்-21 ரக விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும். எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய சில நொடிகளில் அபிநந்தன் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. விமானத்திலிருந்து குதித்து பாகிஸ்தான் எல்லைக்குள் உயிர் தப்பிய அபிநந்தனை சிறை பிடித்தது பாகிஸ்தான். அபிநந்தனை விடுவிக்க இந்தியா கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக 60 மணி நேரத்தில் அவரை திருப்பி அனுப்பியது பாகிஸ்தான்.

 

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, அபிநந்தனிடம் நடத்தப்பட்ட பல கட்ட சோதனைகளுக்கு பிறகே, அவர் மீண்டும் விமானப்படையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அபிநந்தனின் துணிச்சலைப் பாராட்டி, அவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது. இந்திய ராணுவத்தில் பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா ஆகிய விருதுகளுக்கு பிறகு போர்க்கால துணிச்சலான செயல்பாடுகளுக்காக 3-வது உயரிய விருது வீர் சக்ரா விருதாகும்.


இதே போல் பாலகோட்டில் தாக்குதல் நடத்திய விமானப் படையின் வீரர்களுக்கும் வாயுசேனா பதக்கம் வழங்கப்பட உள்ளது. சுற்றியுள்ள எந்த பகுதிகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தீவிரவாதிகளின் முகாம் மீது துல்லியமாக குண்டுகளை வீசி தாக்குதலை வெற்றிகரமாக முடித்ததற்காக அவர்களும் கவுரவிக்கப்படுகின்றனர். இந்த விருதுகள் வழங்குவது பற்றிய மத்திய அரசின் அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்திற்கு முன்பே வெளியாகும் என கூறப்படுகிறது.

காஷ்மீரில் முழு அமைதி; அஜித்தோவல் நேரில் ஆய்வு

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds