Sep 8, 2020, 16:31 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சிபிஐ அதிகாரிகள் கிடுக்கு பிடி போட்டு விசாரித்தனர். சுஷாந்த்துக்கு அதிகளவில் போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் புகார் எழுந்ததால் அதன்பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. Read More
Sep 8, 2020, 15:51 PM IST
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியின் துன்புறுத்தலால் ஒரு அரசு டாக்டர் ஆட்டோ வாங்கி ஓட்டும் சோக சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள தாவனகெரே பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (53). இவர் பெல்லாரி அரசு குழந்தைகள் நல மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். Read More
Sep 8, 2020, 14:35 PM IST
திரைப்பட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவலைக்கிடமான நிலைக்குச் சென்ற அவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வருகிறார். Read More
Sep 8, 2020, 14:19 PM IST
கொரோனா சூழலில் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிறுவனங்களுக்குக் கடன் மறு சீரமைப்பு திட்டங்களை அறிவிப்பது தொடர்பாகப் பரிந்துரைக்க முன்னாள் மூத்த வங்கியாளர் கே.வி.காமத் தலைமையிலான குழுவை ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அமைத்தது. Read More
Sep 8, 2020, 14:10 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் கணவரான தீபக் கோச்சாரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகச் சந்தா கோச்சார் பணியாற்றினார். இவரது கணவர் தீபக் கோச்சார், தொழிலதிபர். Read More
Sep 8, 2020, 11:53 AM IST
இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 8வது இடத்தில் உள்ளது. கேரளா வழக்கம்போல முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் 7 வயதுக்கு மேற்பட்டவர்களின் கல்வியறிவு குறித்து தேசிய புள்ளி விவரத் துறை நடத்திய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது Read More
Sep 8, 2020, 11:04 AM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் பின்னர் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Sep 8, 2020, 10:59 AM IST
பாகுபலி ஹீரோ பிரபாஸ் தற்போது ராதே ஷியாம், ஆதி புருஷ் என இரண்டு படங்களில் நடிக்கிறார். சில நடிகர்கள் கொரோனா உதவி என தங்கள் உதவிக் கரத்தை நீட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரபாஸ் தனது உதவியை வனத்தை நோக்கித் திருப்பி இருக்கிறார். Read More
Sep 8, 2020, 09:18 AM IST
காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே இந்தியா-சீனா படைகள் நேற்று(செப்.7) மாலை மீண்டும் மோதலை தொடங்கியுள்ளன. எல்லையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக ஏ.என்.ஐ. செய்தி தெரிவித்துள்ளது. Read More
Sep 8, 2020, 09:12 AM IST
சென்னை மற்றும் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. கோவையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More