Aug 16, 2019, 11:40 AM IST
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்றிரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் காஞ்சி தலைவாஸ் அணியின் உரிமையாளராக இருந்த சந்திரசேகர், வங்கிக் கடன் தொல்லையால் தற்கொலை முடிவை மேற்கொண்டதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Aug 16, 2019, 09:35 AM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல்சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்தது தொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More
Aug 15, 2019, 15:47 PM IST
அதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது. Read More
Aug 15, 2019, 14:38 PM IST
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கனவை நனவாக்கியது போல், ஒரே நாடு, ஒரே தேர்தலும் நாட்டிற்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Aug 15, 2019, 13:01 PM IST
அரிவாளுடன் வந்த முகமூடி கொள்ளையர்களை, வயதான காலத்திலும் துணிச்சலாக விரட்டியடித்த நெல்லை கடையத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். Read More
Aug 15, 2019, 12:02 PM IST
காஷ்மீர் மகாராஜாவின் பேத்தி என்று ஒரு பெண் பேசும் வீடியோ, சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவியது. ஆனால், அது மகாராஜாவின் பேத்தி அல்ல என்று இப்போது தெரிய வந்திருக்கிறது. Read More
Aug 15, 2019, 11:44 AM IST
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More
Aug 15, 2019, 09:56 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் , பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது 21 முறை குண்டுகள் முழங்கின. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஏற்கனவே 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி இம்முறை தொடர்ந்து 6-வது ஆண்டாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக, முப்படையினரின் அணிவகுப்பையும் பிரதமர் மோடி ஏற்றார். Read More
Aug 15, 2019, 09:46 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோஹ்லியும், இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் டி20 போட்டி போல் விஸ்வரூபம் எடுக்க, இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்தது. Read More
Aug 14, 2019, 22:41 PM IST
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், லூயிசும் இந்திய பந்து வீச்சை சிதறடித்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி, 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர். Read More