Aug 4, 2020, 09:18 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதித்துள்ளது. Read More
Aug 3, 2020, 19:31 PM IST
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. Read More
Aug 3, 2020, 10:19 AM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மகளுக்கும் தொற்று பாதித்துள்ளது. இந்தியாவில் இது வரை 17 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. Read More
Aug 3, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரை இந்நோய்க்கு 4132 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. Read More
Aug 2, 2020, 09:53 AM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 877 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 14 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. Read More
Aug 1, 2020, 16:56 PM IST
சினிமாவில் கருத்துச் சொன்னால் போதாது. அதைச் சமுதாயத்தில் மக்கள் மத்தியில் நடைமுறையில் செய்து காட்டுபவர்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். வில்லன் நடிகர் என்றாலே அவர்கள் மீது எப்போதும் ஒரு கோபம் மக்கள் மத்தியிலிருக்கும். Read More
Aug 1, 2020, 13:26 PM IST
இது வரை 45 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று பாதித்ததில், ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் மரணம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கை எடுக்கவில்லை அதிபர் டிரம்ப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. Read More
Aug 1, 2020, 13:19 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 57,117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 764 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது. Read More
Aug 1, 2020, 12:35 PM IST
சென்னையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொடுகிறது. நேற்று மாலை வரை 99,794 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். Read More
Jul 31, 2020, 15:31 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 360 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று மாலை வரை 2.40 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,838 ஆக உள்ளது. Read More