Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Aug 10, 2019, 10:39 AM IST
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் கன மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் நிரம்பி வழிவதால் காவிரியில் 1.5 லட்சம் கன அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டு கட்டுக்கடங்காத வெள்ளமாக தமிழகத்திற்கு சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. Read More
Aug 8, 2019, 10:53 AM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது. Read More
Aug 1, 2019, 15:26 PM IST
பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Jul 23, 2019, 22:04 PM IST
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் இ-சிகரெட் இந்தியாவில் அறிமுகமானது. தற்போது அது இளைஞர் மத்தியில் பரவலாக புழக்கத்தில் உள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் என்னும் நச்சு இ-சிகரெட்டில் இல்லை என்று மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. Read More
Jul 22, 2019, 12:37 PM IST
கேரளாவில் பருவமழை கொட்டுவதால், குற்றாலத்திற்கு தண்ணீர் வருகை அதிகரித்து சீசன் களைகட்டியுள்ளது. Read More
Jul 21, 2019, 13:10 PM IST
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, கன மழை பெய்வதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு 8300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 13:49 PM IST
கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Jul 19, 2019, 09:43 AM IST
சாரல் மழை பொழியாததால், அருவிகள் வறண்டு, சீசன் களையிழந்து காணப்பட்ட குற்றாலத்தில், திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட குற்றாலப் பிரியர்கள் இப்போதே திட்டமிடலை ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 10, 2019, 11:47 AM IST
மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த பின் முதல் முறையாக ராகுல்காந்தி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டுவிட்டரில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்று ஒரு கோடியை எட்டியுள்ளதாகவும், அந்த மகிழ்ச்சியை அமேதி மக்களுடன் உற்சாகமாக பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். Read More