Jun 2, 2020, 11:28 AM IST
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கே.என்.லட்சுமணன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்த லட்சுமணன் இன்று மரணமடைந்தார் Read More
Jun 2, 2020, 11:24 AM IST
தமிழகத்தில் தனியார் ஆய்வுக்கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Jun 1, 2020, 09:25 AM IST
உலகில் அதிகம் கொரோனா பாதித்த நாடுகளில் இந்தியா 8வது இடத்திற்கு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக அமெரிக்காவில்தான் 18 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர் Read More
May 31, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே30) மட்டும் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
May 28, 2020, 09:04 AM IST
மகாராஷ்டிராவிலிருந்து ஒரே நேரத்தில் 36 ரயில்களை அனுப்பி, மேற்கு வங்கத்திற்கு கொரோனாவை பரப்ப பியூஸ் கோயல் முயற்சிக்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமித்ஷாவையும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இது வரை கொரோனாவால் 4192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
May 26, 2020, 13:55 PM IST
நாட்டில் இது வரை ஒரு லட்சத்து 45,380 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதில், 60,490 பேர் குணமடைந்துள்ளனர். 4167 பேர் மரணமடைந்துள்ளனர்.உலகம் முழுவதும் பரவியுள்ள சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. Read More
May 24, 2020, 14:41 PM IST
மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநில அரசை குறை கூறியவர்களுக்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, வேண்டுமானால், என் தலையை வெட்டுங்க.. என்று கோபம் கொண்டார். Read More
May 24, 2020, 10:58 AM IST
தெலங்கானாவிலிருந்து ஒடிசாவுக்குச் சென்ற சிறப்பு ரயிலில் ஒரு பெண்ணுக்குப் பிரசவம் நடந்தது. ஆண் குழந்தையைப் பெற்ற அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 22, 2020, 15:04 PM IST
அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அம்பன் புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசாவை விட மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 72 பேர் வரை உயிரிழந்துள்ளனர். Read More
May 22, 2020, 12:20 PM IST
கொரோனா பாதிப்பு நிலவரம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடியோ கான்பரன்ஸ் ஆலோசனைக் கூட்டம், இன்று மாலை நடைபெறுகிறது.இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. Read More