கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கைது

by Isaivaani, Jan 29, 2018, 20:42 PM IST

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருபவர் நடிகை அமலா பால். இவர், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு, இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

இந்நிலையில், அமலா பால் புதுச்சேரியில் போலி ஆவணங்கள் சமர்பித்து சொகுசு காரை பதிவு செய்து, 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, அமலா பால் மீது குற்றப்பிரிவு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், நடிகை அமலா பால் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில், கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

இதேபோல், நஸ்ரியாவின் கணவரான பஹத் பாசில் மற்றும் நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி ஆகியோர் கார் வரி ஏய்ப்பு மோசடி வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You'r reading கார் வரி ஏய்ப்பு வழக்கில் நடிகை அமலா பால் கைது Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை