குட்டியுடன் கிணற்றில் விழுந்த காட்டு யானைகள்!

கிணற்றில் விழுந்த காட்டு யானைகள்!

by Radha, Jun 20, 2018, 11:11 AM IST

சத்தியமங்கலம் அருகே 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த 3 யானைகளை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர்.

Elephants

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அடுத்த கானக்குந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மருதவேல். இவர் இன்று காலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது யானை பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக கிணற்றில் எட்டி பார்த்து போது, உள்ளே 3 யானைகள் இருப்பதை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத்துறையினர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றில் இருந்து யானைகள் வெளியே வர பாதை அமைத்து கொடுத்தனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஒன்றன்பின் ஒன்றாக யானைகள் வெளியே வந்தன. குட்டியானை வெளியேற தாய் யானை உதவியதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் 3 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன.

You'r reading குட்டியுடன் கிணற்றில் விழுந்த காட்டு யானைகள்! Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை