அமைதியாக படப்பிடிப்பை முடித்த படக்குழு - நேர்கொண்ட பார்வை முக்கிய அப்டேட்
Ajiths Nerkonda parvai new update
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகிவரும் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் நீண்ட நாள்களாக வரவில்லை என அஜித் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். அமைதியாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறது படக்குழு.
அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி ஹிட்டான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜித் தற்பொழுது நடித்துவருகிறார். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்கிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீப காலங்களாக நடந்துவந்தது. இதில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கவிருக்கிறது படக்குழு. படத்தின் முக்கால் காட்சி ‘கோர்ட் ரூம் சீன்’ மற்றும் ‘ரிசோர்ட் சீன்’ தான் என்பதால் படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்திருக்கிறது படக்குழு.
கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாத்தில் நடந்து முடிந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைக்கு சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு. படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார். தவிர ஷ்ரதா ஸ்ரீநாத் லீட் ரோலில் படத்தில் நடிக்கிறார்.
You'r reading அமைதியாக படப்பிடிப்பை முடித்த படக்குழு - நேர்கொண்ட பார்வை முக்கிய அப்டேட் Originally posted on The Subeditor Tamil
More Cinema News