நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் திடீர் நோட்டீஸ் தனி அதிகாரி நியமன விவக்காரத்தால் சர்ச்சை

nadigar sangam election 2019 results date

by Chandru, Oct 8, 2019, 17:10 PM IST

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.

இதில் நாசர், விஷால் தலைமையிலான ஒரு அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான அணியும் என இரண்டு அணிகள் போட்டியிட்டன. தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு முடியும் வரை ஓட்டு எண்ணிக்கை நடத்ததடை விதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கு சங்க தனி அதிகாரி நியமிப்பது தொடர்பாக சங்க பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கடந்த சில மாதங்களாக சங்கம் செயல்படாமல் இருப்பதால் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கு சங்க பதிவாளர் அனுப்பியிருக்கும் இந்த நோட்டீஸுக்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் என்று நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணுவது பற்றி வரும் 15ம் தேதி முடிவு செய்யப்படும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

You'r reading நடிகர் சங்கத்துக்கு பதிவாளர் திடீர் நோட்டீஸ் தனி அதிகாரி நியமன விவக்காரத்தால் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை