விஷால் நடித்திருக்கும் ஆக்ஷன் படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாவது
ஆக்ஷன் என்னுடைய கனவு படம்.
ஆக்ஷன் என்னுடைய கனவு படம்.
![action.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/11/9112019blobid1573301482765.jpg)
விஷால் இயக்குநரின் நடிகர். ஒருமுறை அவர் ஒப்பந்தம் செய்துவிட்டால் நாம் என்ன சொல் கிறோமோ அதை அர்ப்பணிப்போடு செய் வார். மேலிருந்து குதிக்க சொன்னேன். உடனே குதித்து விட்டார்.
இளம் இயக்குனர்கள் பெரிய ஹீரோக்களை வைத்துப் படம் எடுக்கும்போது அவர்களைத் திருப்திப்படுத்துவதில் மட்டுமே குறியாக உள்ளனர். ஹீரோக்களே இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால் தயாரிப்பா ளர்களால் இயக்குனரை ஒன்றும் சொல்ல முடியவில்லை. தேவையே இல்லாமல் ஹீரோ பின்னாடி 2, 000 எக்ஸ்ட்ரா ஆர்டிஸ்டுகளை நிற்க வைத்து பிரம்மாண்டத்தை காட்டு கிறார்கள். நாள் முழுவதும் ஒரே ஒரு ஷாட்டை மட்டும் எடுத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறார்கள். சில இயக்குநர்கள் பெரிய ஹீரோ படங்களை இயக்கும்போது ஹீரோக் களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை. ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.
இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.
![atlee.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/11/9112019blobid1573301504951.jpg)
தற்போது பிகில் படம் 200 கோடி வசூல் என்ற தகவல் வந்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் வசூல் நிலவரம் இன்னும் முழுதிருப்தி ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் முதல் நாளே விஜய் பெயரை தட்டிக் கொண்டு சென்றுவிட்டார். இதை குறிக்கும் வகையில்தான் ஆக்ஷன் நிகழ்ச்சியில் சுந்தர்.சி பேசியதாக கூறப்படுகிறது.