தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை திட்டமிட்டு டூவீலரை பஞ்சர் செய்து உதவி செய்வதாக கூறி கடத்தி சென்று திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் முகமது ஆரிப், சென்ன கேசவன், கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
![Samantha.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575636259934.jpg)
![vishal.jpg](https://images.thesubeditor.com/newsarea_images/2019/12/6122019blobid1575636493406.jpg)
தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜூனா,' இன்று காலை எழுந்தபோது நீதி வழங்கப்பட்டதை அறிந்தேன்' என குறிப்பிட்டிருக்கி றார். நடிகர் அல்லு அர்ஜூன்,'நீதி வழங்கப்பட்டது' என்றும், நடிகர் நானி,'நகரத்துக்கு ஒரு ரவுடி தேவை அந்த ரவுடி போலீசாக இருக்க வேண்டும்' என்றும். நடிகர் ஜூனியர் என்டிஆர், 'நீதி வழங்கப்பட்டது. திஷா ஆன்மா சாந்தி அடையட்டும்' எனவும் பாராட்டி உள்ளனர்.
நடிகை சமந்தா கூறும்போது,' தெலங்கானா போலீசாரை நேசிக்கிறேன். பயம்தான் பெரிய தீர்வு சில சமயம் அது ஒன்றுதான் தீர்வு' என தெரிவித்தள்ளார்.
'பலாத்காரம் போன்ற குற்றங்களை செய்துவிட்டு எவ்வளவு தூரம்தான் குற்றவாளிகள் ஓடிவிட முடியும். திஷாவுக்கு நீதி கிடைத்தது. தெலங்கானா போலீஸின் என்கவுன்டருக்கு நன்றி' என நடிகை ரகுல் ப்ரீத் சிங் கூறி உள்ளார். இதுபோல் ஏராளமான நட்சத்திரங்கள் தெலங்கனா போலீசாரை பாராட்டி வருகின்றனர்.