துப்பாக்கியுடன் ஸ்ரேயாவை மடக்கிய போலீஸ்.. லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு..
Actress Shriya held at gunpoint by London police
நடிகை ஸ்ரேயா தற்போது ஆர்.மாதேஷ் இயக்கத்தில் சண்டகாரி படத்தில் நடித்து வருகிறார். விமல் ஹீரோ. சாப்ட்வேர் நிறுவன அதிகாரியாக ஸ்ரேயா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன் விமான நிலையத்தில் நடந்தது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார், உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர்.
"எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் " என்று ஸ்ரேயாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுக்க அவர் பேசாமல் அச்சத்துடன் நின்றார். அருகில் இருந்த நடிகர் விமல் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்டுதாங்கள் படப்பிடிப்புக்காக வந்ததாக தன்னிடம் இருந்த ஆவணங்களை காட்டினார். பட குழுவினரும் வந்து நிலைமைய விளக்கினார். அதன்பிறகு போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்ரேயாவை அனுப்பி வைத்தனர்.
You'r reading துப்பாக்கியுடன் ஸ்ரேயாவை மடக்கிய போலீஸ்.. லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News